Police Department News

தொடர் வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

தொடர் வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

தாழையூத்து காவல்நிலைய குற்ற எண் : 302/20 பிரிவு 294(b),387,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்(29), தொடர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்தும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு சாம்சன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்கை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 29.10.2020 இன்று தாழையூத்து காவல் ஆய்வாளர் அவர்கள் நாங்குநேரி பார்ஸ்டல் சிறையில் சமர்ப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published.