Police Department News

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திரு.B.G.செல்வக்குமார் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது டி.பி.கே.ரோடு முத்து பாலம் அடியில், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகரை சேர்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் என்ற ஆப்பு ஆறுமுகம் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருள் விற்பனைக்காக வைத்திருந்தார்,

காவலர்களை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தார், அவரை மடக்கிப் பிடித்து கைது செய்து, அவரிடமிருந்த 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து , சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது,

செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.