Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார்

திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார்

01.12.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ஆம் அணியில் கடந்த 7 மாதங்களாக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 299 காவலர்களுக்கு தளவாய் திரு.அய்யாச்சாமி அவர்களின் தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்று (01.12.2020) பயிற்சி நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மேலும் கவாத்து பயிற்சி மற்றும் சட்டம் ஒழுங்கு பாடத் தேர்வில் சிறந்து விளங்கிய பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி காவல்துறையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுரை கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.M.S.முத்துசாமி இ.கா.ப அவர்களும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 ஆம் அணியில் உள்ள ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்களின் குடும்பத்தார்களும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.