Police Department News

நெல்லை அருகே 45 வயது மதிக்கத்தக்கவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை

நெல்லை அருகே 45 வயது மதிக்கத்தக்கவரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். உடையார்பட்டி வடக்கு புறவழிசாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவரின் கையில் முருகன் என பச்சை குத்தி இருந்தது.

நேற்று இரவு கும்பலாக வந்து மது அருந்திய பிறகு ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.