Police Recruitment

மதுரை மாவட்டம், மேலூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி, கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம், மேலூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி, கீழவளவு போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம், கீழபூங்குடி, அழகிச்சிபட்டியில் வசித்து வருபவர் சுதாகர், பஞ்சவரணம் தம்பதியினர், இவர்களுக்கு சுபக்ஷா வயது 6 என்ற பெண் குழந்தை உள்ளது. சுதாகர் மேலூர் ஆட்டுகுளத்தில் உள்ள விநாயகர் கேஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 1 ம் தேதி மாலை வேலை முடித்து விட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் மேலூர் to சிவகங்கை ரோடு நாயத்தான்பட்டி, ஆச்சி மெஸ் அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வரவும் இவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார், இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று 04/01/21 அன்று அதிகாலை இறந்து விட்டார். இது குறித்து கீழவளவு காவல் நிலையத்தில் ஆய்வாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. சுதன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்,

Leave a Reply

Your email address will not be published.