Police Recruitment

திறந்திருந்த வீட்டில் உள்ளே சென்று நகை மற்றும் பணம் திருடியவர் கைது

திறந்திருந்த வீட்டில் உள்ளே சென்று நகை மற்றும் பணம் திருடியவர் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த சுரேஷ் வயது 40, என்பவர் தனது வீட்டின் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது, அங்கே வீட்டிற்குள் இருந்து எதையோ திருடி விட்டு திருடன் ஒருவன் ஓடிச் செல்வதை பார்த்த சுரேஷ், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வீட்டில் திருடிய திருடனை கையும் களவுமாக பிடித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் மேற்படி நபரை விசாரித்ததில் அவர பெயர் தேவராஜ் வயது 24, என்பது தெரிய வந்தது, அவர் மீது வழக்கு பதிவு செய்து மேற்படி நபரிடமிருந்து தங்க செயின் 3 அரை பவுன், மற்றும் ரூபாய் 10,000/− பறிமுதல் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன் பின் நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.