Police Recruitment

மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மீனாம்பாள்புரம், சத்தியமூர்த்தி 6 வது தெருவில் வசித்து வருபவர் கோச்சடை மகன் முத்துச்சரவணன், இவர் செல்லூர் சிவகாமி தெருவில் செல்லும் போதெல்லாம் அந்த தெருவில் உள்ள ஒரு நாய் அவரை பார்த்து குறைத்து வந்துள்ளது, இதனால் கோபமடைந்த முத்துசரவணன் அந்த நாயை அடித்து கொல்ல முடிவு செய்து கடந்த 21 ம் தேதி தனக்கு தெரிந்த கண்மாய்கரையை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் விமல்ராஜ் என்பவருக்கு ரூபாய் 500/− கொடுத்து அந்த நாயை அடித்து கொல்லுமாறு கேட்டுக்கொண்டார், அதன்படி விமல்ராஜ் அவர்கள் கடந்த 21 ம் தேதி அந்த நாயை மனிதத்தன்மையற்ற முறையில் மரக்கட்டையால் அடித்து துடிதுடிக்க கொன்றுள்ளார், அதையும் தாண்டி மரணவேதனையில் துடிக்கத்துடிக்க பிளாஸ்டிக் சாக்குப்பையில் போட்டு கட்டி கொலை செய்துள்ளார், இதன் காரணமாக மதுரை வடக்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் திருமதி. முத்துமொழி அவர்களின் புகாரின் பேரில் செல்லூர் D2, காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு கனேசன் அவர்கள் இந்திய தண்டனைச்சட்டம் 429, r/w 11 (i) (1)Prevention of cruelty against animales act 1960 ன்படி வழக்கு பதிவு செய்து மேற்படி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.