சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையர் எல்லையின் கீழ் வரும் அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார்(33).
பணியில் சிறப்பாக செயல்பட்டவர் சதீஷ்குமார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியிலுள்ள மேலையூர் ஆகும். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் நேற்று நள்ளிரவு தான் பணியாற்றும் ஸ்டேஷனுக்கு சாதாரண உடையில் வந்துள்ளார்.
ஸ்டேஷனில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவியிடம் தனி அலுவல் உள்ளது என்று கூறி பிஸ்டலை பெற்றுள்ளார். பின்னர் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து கடகடவென்று சில வரிகளை எழுதியுள்ளார்.பின்னர் துப்பாக்கியை எடுத்து தனது நெற்றிபொபொட்டில் வைத்துள்ளார்.
இதைப்பார்த்து பதறிப்போன சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவி சார் என்ன இது வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது துப்பாக்கியை சிரஞ்சீவியை நோக்கி நீட்டியுள்ளார். பின்னர் வெளியே சென்றுள்ளார். வெளியில் அலுவலாகத்தான் செல்கிறர் என்று சிரஞ்சீவி சாதாரணமாக இருந்துள்ளார். ஆனல் வெளியில் சென்ற சதிஷ்குமார் திடீரென தனது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு ஆகியோர் நேரில் வந்து விசாரணை நட்த்தினர். சதீஷ்குமார் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுகொண்ட்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது. தற்கொலை செய்துக்கொண்ட சதீஷ்குமார் 2011-ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். இன்னும் திருமணமாகவில்லை. இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
தற்போது பணியாற்றும் அயனாவரம் காவல் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பணிமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.சென்னை டிபி.சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது திடீர் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் தற்கொலை செய்வதற்கு முன் சதீஷ்குமார் எழுதிய கடித்த்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்ல, எவ்வித காரணமுமில்லை என்று எழுதியுள்ளார்.