Police Recruitment

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் முயற்சியில் “உயிர் காவலன்” என்கின்ற தலைப்பில் மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா இன்று மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு. விசாகன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையர் திரு சுகுமாரன் அவர்கள், நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு திருமலைக்குமார், தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் திரு. மாரியப்பன். வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. செல்வம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு தங்கமணி, திரு சுரேஷ், திரு. கணேஷ்ராம், திரு. ரமேஷ்குமார், திரு.கார்த்திக், திருமதி. பால்தாய் மற்றும் ஏராளமான காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.