Police Recruitment

நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது.

நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது.

நீலாங்கரை பகுதியில் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, கையால் தாக்கிய 4 சகோதரர்கள் கைது. கார் கைப்பற்றப்பட்டது.

J-8 Neelankarai Police arrested four drunkards for assaulting SI – car seized(15.02.2021).

J-8 நீலாங்கரை காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் ஜெயகுமார், வ/58 மற்றும் ஆயுதப்படை காவலர்/ ஓட்டுநருடன் சுற்றுக் காவல் வாகனத்தில் நேற்று (14.02.2021) மாலை கொட்டிவாக்கம், குப்பம் கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 4 நபர்கள் காரை நிறுத்தி அதனருகில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை, உதவி ஆய்வாளர் ஜெயகுமார் அவர்களிடம் சென்று இவ்வாறு சாலையில் மது அருந்த கூடாது. அனைவரும் செல்லுங்கள் எனக் கூறினார். ஆனால் 4 நபர்களும் குடிபோதையில் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் பேசி, உதவி ஆய்வாளரை கையால் தாக்கினர். உடனே, உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், J-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட 1.பிரபு, வ/26, அரும்பாக்கம், இவரது சகோதரர் 2.பிரவீன், வ/24, அரும்பாக்கம், 3.பகத் பாண்டியன், வ/24, குன்றத்தூர், இவரது சகோதரர் 4.ஆனந்தபாண்டியன், வ/22, குன்றத்தூர் ஆகிய 4 நபர்களை கைது செய்து, அவர்களது கார் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.