Police Recruitment

மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி

மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி

மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.முத்துராஜா அவர்கள் 27 ம் தேதி பகல் சுமார் 12.30 மணியளவில் காவல் நிலைய பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி, மதுரை தேனி ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறும் தகவலை கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் கூறி, அவரது அனுமதி பெற்று சக காவலர்களுடன் தேவையான உபகரணங்களோடு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு செல்லூர், தத்தனேரி, அருள்தாஸ்புரத்தை சேர்ந்த கனேசன் மகன் வினோத்குமார் வயது 20/21, இருசக்கரவாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவன் வசம் கஞ்சா இருப்பது தெரியவந்தது, மேலும் அவன் தன் இருசக்கர வாகனத்தின் ஏரியா, ஏரியாவாக சென்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஒத்து கொண்டதின் பேரில் அவனை கைது செய்து கஞ்சா, இருசக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்து அவன் மீது வழக்கு பதிவு செய்தார், மேலும் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.