Police Recruitment

மதுரை, மேலவாசல் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை, மேலவாசல் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை மேலவாசல் TNHB காலனியில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் சேவுகன் மனைவி ராணி வயது 48/21, இவரது மகன் விஜய்க்கு (வயது 23/21,) திருமணமாகி அவர் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 28 ம் தேதி இரவு 10.30 மணியளவில் தன் வீட்டு வாசலில் தன்னுடைய மகன் விஜய், மற்றும் மருமகள், மகனின் நண்பர்கள் ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர் அந்த சமயம், அங்கு வந்த சிவா என்ற அஞ்சான் சிவா, பாபு என்ற தக்காளி பாபு, சதீஸ்குமார் என்ற தக்காளி சதீஸ்குமார், கார்த்திக் என்ற மென்டல் கார்த்திக், ஜெயபாலன் என்ற எலி ஜெயபாலன், அஜீத்குமார் மற்றும் சிலர் தேவையில்லாம் அவர்களிடம் வந்து பிரச்சனை செய்தனர். நாங்கள் கஞ்சா சரக்கு விற்கிறோம் என்று ஏரியாவில் சொல்லிக்கொண்டு திரிகிறாயா என கூறி கைகாளாலும், கத்தியாலும் விஜயை அடித்தும் குத்தி ரத்த காயத்தை ஏற்படுத்தினர் அவர்களை தடுத்த விஜய் நண்பர்களையும் கத்தியை காட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர், அதன்பின் விஜயை ஒரு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்டனர், மருத்துவமனையிலிருந்து கிடைத்த தகவலின்படி C1, காவல்நிலைய போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயம் பட்ட நபரை பார்த்து அவர்களிடமிருந்து புகாரை பெற்று, காவல் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பணராஜ் அவர்கள் வழக்கு பதிந்து ஆய்வாளர் திருமதி.கீதாலெக்ஷிமிஅவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.