Police Department News

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கத்திமுனையில் மூதாட்டி பலாத்காரம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கத்திமுனையில் மூதாட்டி பலாத்காரம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வடகாடு பட்டி பகுதியில் வீடு புகுந்து 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோழவந்தான் அருகே உள்ள வடக்காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்ற சவுந்தரபாண்டி வயது 50, /21, என்பவர் வசித்து வந்தார் இவரக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ள நிலையில் இவர், இவரது பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியை வீடு புகுந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உடல் நிலை மிகவும் மோசமானதால், அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காடுபட்டி போலீசார் பலத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி பாண்டி என்ற சவுந்திரபாண்டியை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.