Police Department News

மதுரை மாவட்டம், கீழவளவு பகுதியில் மணல் திருட்டு, 3 நபர்கள் கைது, கீழவளவு போலீசார் நடவடிக்கை

மதுரை மாவட்டம், கீழவளவு பகுதியில் மணல் திருட்டு, 3 நபர்கள் கைது, கீழவளவு போலீசார் நடவடிக்கை

மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் மணல் திருட்டு நடைபெரும் தகவல் அறிந்து கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள்,ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு போலீஸ் படையுடன் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை, கைப்பற்றி டிராக்டரை ஓட்டி வந்த அட்டப்பட்டியை சேர்ந்த சுல்தான், ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி வந்த முத்தம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த அட்டப்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி ஆகிய 3 நபர்களை கைது செய்தனர் வாகனத்தின் உரிமையாளர் அட்டப்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவாக இருந்து வருகிறார். கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிந்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஐஜி அவர்கள் உதகதரவினை தொடர்ந்து மணல் திருட்டு ஈடுபட்ட அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.