Police Department News

மதுரை,கீழவளவு புறாக்குட்டு மலை பகுதியில் கிராவல் மண் திருட்டு, ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம். DSP SPL TEAM அதிரடி

மதுரை,கீழவளவு புறாக்குட்டு மலை பகுதியில் கிராவல் மண் திருட்டு, ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம். DSP SPL TEAM அதிரடி

மதுரை, கீழவளவு புறாக்குட்டு மலைக்கு பின்புறம் உள்ள கண்மாய் பகுதியில் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக DSP SPL Team க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று 12/04/21 சுமார் 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு ரோந்துப்பணியில் கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா அவர்களுடன் சென்றனர் அங்கே 3 டிப்பர் லாரிகளில் ஜேசிபி மூலம் கிராவல் மண் கடத்தல் நடப்பதை கண்டவுடன் போலீசார் விரைந்து சென்றனர், போலீசாரை கண்டதும் வாகன உரிமையாளர் ராஜ்குமார் வயது 40/21, மற்றும் 3 நபர்கள் தப்பியோடிவிட்டனர், டிப்பர் லாரி டிரைவர் சின்னமலம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் வயது 25, மட்டும் பிடிபட்டார், உடனே அவரை கைது செய்து டிப்பர் லாரிகள் மூன்றையும், மற்றும் ஜேசிபியையும் கைபற்றி காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.