Police Recruitment

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது மதுரை பெரியார் பஸ் நிலைய மேம்பாலம் எல்லிஸ் நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ். எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 3பேரை பிடித்து விசாரித்தனர்.இதில் அவர்கள் கூடல் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் வயது( 27)ஆரோக்கியராஜ் வயது (27) இமானுவேல் வயது (27)என்பதும் 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து […]

Police Recruitment

ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்தவர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்தவர் கைது மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்தவர் பழனி வயது (60) மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுகிறார். இவர் கடந்த மே8ம் தேதி இரவு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சவாரி ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த ஆட்டோவில் நான்கு பேர் கொண்ட கும்பல் பழனியை மிரட்டி அவரது ஆட்டோவில் ஏறியுள்ளனர். பின் ஒத்தக்கடை அடுத்த தட்டான்குளத்திற்கு அவரை அழைத்துச் சென்று ரூபாய் 1500 பணம் பறித்ததுடன் […]

Police Recruitment

பணம் பறித்த இரண்டு பேர் கைது

பணம் பறித்த இரண்டு பேர் கைது மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் வயது (44) இவர் மேலவாசல் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் கண்ணனை வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தைப் பறித்து சென்றனர்.இதுகுறித்து புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மேல வாசல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது (29)அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது (28) ஆகிய இருவரும் கண்ணனிடம் […]

Police Recruitment

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது மதுரை தத்தனேரி எம்.ஜி.ஆர் தெருவில் பெட்டி கடையில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் தத்தனேரி எம் ஜிஆர் தெருவில் பெட்டிக்கடை முன்பாக பண்டல்களாக வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடையில் இருந்த 3 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடையில் […]

Police Recruitment

எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார்.

எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்குளம் நெம்மேனி அருகே உடையனை கண்மாய்கரை அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிடப்பதாக 18.05.2022 அன்று நெம்மேனி கிராம நிர்வாக அலுவலர் திருமதி.சுகந்தி அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் குற்ற எண்: 120/22, U/s. 174 CrPC Suspicious Death வழக்குப் பதிவு செய்யப்பட்டு […]

Police Recruitment

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மதுரை மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை ரயில்வே போலீசார் சார்பில் ரயில் நிலையம் பெரியார் பஸ் நிலையம் மேம்பாலம் வழியாக போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இதில் பெண் காவலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Police Recruitment

பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை

பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து மற்றும் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியர்களை ஏற்றுச் செல்லும் பேருந்துகள் மற்றும் பயன்கள் என 32 வாகனங்களில் நேற்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தம்; மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு […]

Police Department News

மதுரை மாநகர் காவல் துறையினருக்கு காவலர் நல நிதி வழங்கிய காவல் ஆணையர்

மதுரை மாநகர் காவல் துறையினருக்கு காவலர் நல நிதி வழங்கிய காவல் ஆணையர் மதுரை மாநகர் காவல்துறை யில் சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆயுதப்படை, போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 9 நபர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உரிய செலவுத் தொகை ரூ.10,98,926/-க்கான காசோலைகளை தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து பெற்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் காவலர்களுக்கு வழங்கினார்

Police Department News

மதுரையில் காவலர்களின் தாகம் தணித்த பத்திரிகையாளர்கள்

மதுரையில் காவலர்களின் தாகம் தணித்த பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் அதிகம் நீர் பருக வேண்டும். மண்பானை நீரில் கனிம சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உண்டாகும் பருவக்கால நோய்களை தீர்க்க இது உதவும். எனவே அனைவரும் மண்பானை நீரை பருக வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மதுரை மாவட்டம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் […]

Police Department News

காவலர்களுக்கு மன அழுத்தம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!——அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்:-

காவலர்களுக்கு மன அழுத்தம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!——அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்:- காவல்துறை ஆளினர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஏற்படுத்த ப்பட்ட “மகிழ்ச்சி”திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான மதுரை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மதுரை மாநகர காவல் துறை தலைவர் திரு. லோகநாதன், இ.கா.பா., தலைமை ஏற்று போக்குவரத்து துணை ஆணையர் திரு குமார் மற்றும் மனநம் மருத்துவர் டாக்டர் ,C Rama Subramanian &Dr. கண்ணன் ஆகியோர் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க விழிப்புணர்வு […]