Police Department News

நன்னடத்தை உறுதி மொழியை மீறி குற்றச்செயல்: 2 குற்றவாளிகளுக்கு மீண்டும் சிறை

ஆலந்தூர்,  சென்னை வேளச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 21). இவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உள்ளன. இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முன் ஆஜராகி தான் திருந்தி வாழப்போவதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தவித குற்றச்செயல்களில் ஈடுப்பட மாட்டேன் என்றும் நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார். இந்நிலையில் பால்ராஜ், கடந்த 31-ந் தேதி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Police Department News

சென்னை விமான நிலையத்தில் 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்-மருந்து விற்பனையாளர் கைது

ஆலந்தூர்,  சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து அமெரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்காக பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்கள் மூலம் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கக பிரிவுக்கு விரைந்து சென்ற […]

Police Department News

பண்ருட்டி விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: சொந்த வீட்டிலேயே திருடிய மகன் கைது

பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தேசிங்கு (வயது 55), விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அப்போது வீட்டில் உள்ள அலமாரிகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் அலமாரிகளில் வைத்திருந்த 18 பவுன் நகை, 300 […]

Police Department News

ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு நல உதவிகள் -மாவட்ட எஸ்பி வழங்கினார்

ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு நல உதவிகள் -மாவட்ட எஸ்பி வழங்கினார் தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர், முககவசம், மற்றும் 50 ஏழை, எளியவர்களுக்கு அரிசிபை வழங்கப்பட்டது. இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி. கணேஷ், ஆய்வாளர்கள் ஜெயப்பிரகாஷ், மயிலேறும் பெருமாள் , உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, சங்கர் மற்றும் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் […]

Police Department News

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வாலிபர் நடுரோட்டில் வெட்டி படுகொலை..!!!

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வாலிபர் நடுரோட்டில் வெட்டி படுகொலை..!!! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சி புரத்தில் திருவாடானை அருகே எஸ் வி மங்கலத்தைச் சேர்ந்த மெக்கானிக் விக்னேஷ் என்பவர் தன் நண்பருடன் காரைக்குடி வ உ சி ரோட்டில் உதிரி பாகங்கள் வாங்கிக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது மீனாட்சிபுரம் மூவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேறு ஒரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் […]

Police Department News

மதுரை, SS காலனி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவல் துறை

மதுரை, SS காலனி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவல் துறை மதுரை மாநகர், SS காலனி, எல்லீஸ் நகர், பைபாஸ் ரோடு 70 அடி சாலையில் மராமத்து பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்படாமலும், சாலையில் போடப்பட்ட கற்கள் அப்புறப்படுத்தப்படாமலும், வாகனங்கள் போக்கு வரத்திற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் இன்று காலையில் நமது செய்தியாளர் திரு. செளகத்அலி அவர்கள் அந்த சாலை வழியாக செல்லும் போது, SS காலனி போக்கு வரத்து […]

Police Department News

சட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல் துறையினர் நடவடிக்கை

சட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல் துறையினர் நடவடிக்கை மதுரை மாவட்டம், சமயநல்லூர் சரகம் அலங்காநல்லூர் காவல் நிலைக்கு எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டி அழகாபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று சங்கர் (25) உட்பட இருவரை கைது செய்து, u/s 273, 328 IPC r/w 7 & 20 (I) of Cigarettes and other Tobacco Actகீழ் […]

Police Department News

மாணவியின் கனவை நிறைவேற்றிய காவலர்.

மாணவியின் கனவை நிறைவேற்றிய காவலர். சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, ‘நீட்’ தேர்வு எழுத சென்றார். ஒரிஜினல் ஆதார் அட்டை எடுக்காமல், அதன் நகலை மட்டும் எடுத்து சென்றதால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆதார் எண்ணுடன், மொபைல் போன் எண் இணைக்கப்படாததால், ‘ஆன்லைன்’ வழியாக, ஒரிஜினல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் […]