மதுரையில் கைதி தப்பி ஓட்டம் மதுரையில் மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார். மதுரை எஸ். எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த தீபன் வயது (25)உட்பட இருவர் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் விடுமுறை என்பதால் இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்த எஸ்.எஸ் காலனி போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து […]
Police Recruitment
மதுரை மாவட்டத்தில் அலைபேசி பறித்த சிறுவர்கள் கைது
மதுரை மாவட்டத்தில் அலைபேசி பறித்த சிறுவர்கள் கைது திருமங்கலம் மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் நல்லு குமார் வயது (34) கப்பலூர் சிட்கோவில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கூத்தியார் குண்டு பஸ் ஸ்டாப்பில் இறங்கி தனது நிறுவனத்திற்கு நடந்து சென்றார். இவரை பின்தொடர்ந்த இரண்டு சிறுவர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டினர். அவரிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை பறித்து தப்பினர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் […]
மது கடத்தியவர் கைது
மது கடத்தியவர் கைது திருமங்கலம் குதிரை சாரி குளம் பகுதி நான்கு வழிச்சாலையில் நேற்று திருமங்கலம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக டூவீலரில் வந்த மதுரை சுந்தரராஜபுரம் செல்வகுமார் வயது (45) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் 140 மது பாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் டூவீலர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவருக்கு பாட்டில்கள் சப்ளை செய்த விஜயபாண்டி என்பவரை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர்கள் கைது
கஞ்சா விற்றவர்கள் கைது வேலூர் சுக்காம்பட்டி பகுதியில் எஸ்.ஐ ரமேஷ்பாபு ரோந்து சென்றபோது கஞ்சா சூரக்குண்டு கணேசன் வயது (29) கருப்புசாமி வயது (21) கைது செய்து 275 கிராம் கஞ்சா ரூ. 2,260 இரண்டு அலைபேசிகள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தார்.
டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி
டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால் வயது (79) குழந்தைகள் நல டாக்டர் இவரது மருத்துவமனைக்கு தேனி ரோட்டை சேர்ந்த சங்கர் மனோகரன் 10 ஆண்டுகளாக மருந்துகள் சப்ளை செய்தார். டாக்டரிடம் வியாபாரத்தை பெருக்கவும் குடும்ப செலவுக்காக ரூபாய் 20 லட்சம் கடன் பெற்றார். ஓராண்டுக்கும் மேலாக கடனை திருப்பித் தரவில்லை. அந்த தொகைக்காக டாக்டரிடம் காசோலை வழங்கினார். அதுவும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதுகுறித்து கேட்ட டாக்டரை […]
மனைவி கொலை கணவர் வெறி செயல்
மனைவி கொலை கணவர் வெறி செயல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் கோணக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் வயது (55) இவரது மனைவி செங்கொடி வயது (43) இவர்களுக்கு திருமணம் ஆகி 24 ஆண்டுகள் ஆகிறது காச நோயால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் வீட்டில் இருந்து வருகிறார். மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தம்பதியிடையே வழக்கம்போல் தகராறு நடந்தது ஆத்திரமடைந்த சிவக்குமார் செங்கொடியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை […]
ஆலங்குளத்தில் போலீஸ் ஏட்டை ஓட, ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்
ஆலங்குளத்தில் போலீஸ் ஏட்டை ஓட, ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள் ஆலங்குளம்:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ்(வயது 26), பெர்லின்(24), கஜேந்திரா(22) மற்றும் மரியசுந்தரம் மகன் நவீன்(27) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா சிக்கியது.தொடர்ந்து அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது 3 கிலோ கஞ்சா […]
மேலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி,10 பேர் படுகாயம்
மேலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி,10 பேர் படுகாயம் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிலர் வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.இந்த மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குமரி மாவட்டம் களியாக்க […]
துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது
துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது தருமபுரி பஸ் நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்களை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர போலீசார் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் தருமபுரியில் […]
கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர்கள் கண்டமனூர் தெற்கு தெருவை சேர்ந்த […]