
மது கடத்தியவர் கைது
திருமங்கலம் குதிரை சாரி குளம் பகுதி நான்கு வழிச்சாலையில் நேற்று திருமங்கலம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக டூவீலரில் வந்த மதுரை சுந்தரராஜபுரம் செல்வகுமார் வயது (45) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் 140 மது பாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் டூவீலர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவருக்கு பாட்டில்கள் சப்ளை செய்த விஜயபாண்டி என்பவரை தேடி வருகின்றனர்.
