தமிழக காவல் துறையில் கிரைம், கிரிமினல் டிராக்கிங் நெட் வொர்க் சிஸ்டம் (சிசிடிஎன்எஸ் ) என்கிற திட்டத்தின் கீழ் பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் இறந்தவரின் உடலை விரைவில் அடையாளம் கண்டுபிடிக்க போலீஸாருக்கு உதவும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படும் எப்ஐஆர், தொடர் நடவடிக்கை, கைதானவரின் ரேகை பதிவு உட்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்கும் சிசிடிஎன்எஸ் என்கிற தகவல்களை ஒருங்கிணைக்கும் ஆன்லைன் திட்டம் செயல்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவுக்கான […]
Police Department News
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை இயக்க புதிய கட்டுப்பாடுகள்
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை இயக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 31 ம்தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 7.30 மணி வரை கடற்கரை சாலை உள்ளிட்ட ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வரும் கார்கள் பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்திலும், இருசக்கர வாகனங்கள் பழைய சாராய ஆலை வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
போதைப் பொருட்களை வைத்திருந்த பிரபல கல்லூரிகளின் மாணவர்கள் கைது
டெல்லியில் கஞ்சா, எல்.எஸ்.டி. ப்ளாட்டர்ஸ் ((LSD blotters)) போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த பிரபல கல்லூரிகளின் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். DTDC கொரியர் சர்வீஸ் மூலம், ஜெய்ப்பூருக்கு எல்.எஸ்.டி ப்ளாட்டர்ஸ் அனுப்பப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள், 3 எல்.எஸ்.டி. ப்ளாட்டர்ஸ் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்து கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் போதைப் பொருளை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் […]
பிரெஞ்சு தூதரக முன்னாள் அதிகாரியின் நிலத்தை விற்க முயற்சி – 4 பேர் கைது
புதுச்சேரியில், பிரெஞ்சு தூதரக முன்னாள் அதிகாரியின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களைக் கொண்டு விற்க முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலியன் என்ற அந்த முன்னாள் அதிகாரிக்கு, பிரான்சுவா மார்த்தேன் வீதியில் பூர்விக நிலம் உள்ளது. 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சிகள் நடப்பதாக, சாரம் பத்திரப்பதிவு துறையினர் மூலம் ஜூலியனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, போலி […]
கரூர் இளம்பெண் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் 3பேர் கைது
கரூரைச் சேர்ந்த இளம்பெண் கொலையில் ஓராண்டு கழித்துத் துப்புத் துலங்கியதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் 3பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்த இளையராஜா தன் காதல் மனைவி பர்வீன் பானுவைக் காணவில்லை என 2015ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்துப் பர்வீன் பானுவிடம் செல்போனில் அதிகம் தொடர்பில் இருந்தவர்கள் பெருங்களத்தூரைச் சேர்ந்த ராஜா, மாணிக்கம் ஆகியோர் எனத் தெரியவந்தது. இருவரிடமும் பீர்க்கன்கரணை காவல்துறையினர் விசாரித்ததில் முதலில் ராஜாவுடன் தொடர்பில் இருந்த பர்வீன்பானு […]
மதுரையில் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 7 பேர் சென்னையில் கைது
மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 7 பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரடைஸ் தங்கும் விடுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தங்கும் விடுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கு அறை ஒன்றில் தங்கியிருந்த, முகமது ஆருண், தவுபிக் அலி, ரியாசுதீன் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு […]
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 102 பேரிடம் ரூ.29 லட்சம் மோசடி: தலைமறைவாக உள்ள பெண்ணைப் பிடிக்க தனிப்படை; 2 பேர் கைது
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 102 பேரிடம் ரூ.29 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பாடி, சக்தி நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (43). இவருக்கும் வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த மேகலா என்ற பர்வீனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மகாலட்சுமி தனக்கு […]
பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பிஸ்கெட், கேக் தயாரித்த பிஹார் இளைஞர் கைது
பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக பிஸ்கெட், கேக் தயாரித்து விற்பனை செய்த பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார். பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் பிஸ்கெட், ரஸ்க், கேக் உள்ளிட்டவைகள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த தனிப்பிரிவின் டிஎஸ்பி நீதிராஜன், ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். கொளத்தூர், புத்தகரம், ஜெயலட்சுமி […]
சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கம் சிக்கியது: மலேசியாவிலிருந்து நூதன முறையில் கடத்திய 3 பேர் கைது
கார்கோ பார்சல் மூலம் மலேசியாவிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கத்தை கடத்திய 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னையில் ஏர் கார்கோ பகுதியில் நடத்திய சோதனையில் இரண்டு பேர் சிக்கினர். அவர்கள் பெங்களூரிலிருந்து வந்த பார்சலை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சல் பெட்டியைப் பிரித்தபோது […]
புத்தாண்டு தினத்தில் அமைதியை காக்க காவல்துறையினர் நடவடிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் சிறப்பு வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன தணிக்கையில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு, மதுபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதி வேகத்தை அளவிட்டு காட்டும் கருவி ஆகியவற்றை எப்படி உபயோகிப்பது? என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன், […]