சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ராகேஷ் என்பவர் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ஸ்விப்ட் டிசையர் காரை பெற்று ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ராகேஷ் திடீரென காருடன் மாயமானதால், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் அளித்தார். ராகேஷின் செல்போன் […]
Police Department News
திருவள்ளூர் அருகே வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கல்
திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம் அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போது ரெங்கநாதன் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் ரெங்கநாதன் மற்றும் அவரது மகன் தங்கராஜை […]
ஓட்டல் அறையில் பதுக்கப்பட்டிருந்த 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரியில், ஓட்டல் அறையில் பதுக்கி வைத்திருந்த 1300 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களை சப்ளை செய்த செஞ்சியைச் சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவான நிலையில் சையத் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த ஓட்டலில் இருந்து இந்த மதுபாட்டில்களை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசா இருக்கனும்னு பெரியவர்கள் கூறுவார்கள் அதற்காக இன்று 11/3/2018 ஞாயிறு காலை 10.00 மணி முதல் காவலர் தேர்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் அருப்புக்கோட்டையில் தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதன் காரணமாக காலை 6.00 மணி முதல் […]
மாணவி கொலை சம்பவம்: துணை ஆணையரிடம் மல்லுக்கட்டிய போலி நிருபர் கைது
கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த தி.நகர் துணை ஆணையரிடம் நான் யார் தெரியுமா? என்று பந்தா காட்டிய போலி நிருபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். அனைவரையும் பதற்றப்பட வைத்த இந்த சம்பவத்தில் போலீஸார் மிகுந்த பதற்றத்துடன் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் […]
ராஜீவ் காந்தி கொலை கைதி பாதுகாப்புடன் சுவாமி தரிசனம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பொய்யாழி. இவரது மனைவி சந்திரா. இவர்களது மூத்த மகன் ரவிச்சந்திரன்(49). இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் சொத்து பிரிப்பது தொடர்பாக தற்போது பரோலில் (விடுமுறை) வந்துள்ளார். […]
ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்க வைத்தேன்; காதலித்து விலகியதால் ஆத்திரம் அடைந்தேன்: அஸ்வினி கொலைவழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்கவைத்த பிறகு காதலித்து விலகியதால் ஆத்திரமடைந்து மாணவி அஸ்வினியை கொலை செய்ததாக அழகேசன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அழகேசன், போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அஸ்வினியும் நானும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தற்செயலாக பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரிடம் மனதை பறிகொடுத்தேன். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என ஆசைப்பட்டேன். அஸ்வினியைப் பார்க்க […]
நோயுற்ற குழந்தையைப் பார்க்க லீவு கிடையாது; என்ன பிழைப்பு இது? கண்ணீருடன் பேசும் காவலர்: வைரலாகும் வீடியோ
தனது காலுடைந்த குழந்தையை பார்க்க லீவு தர மறுக்கும் அதிகாரி பற்றி கண்ணீர் வழிய பேசும் கான்ஸ்டபிள் ஒருவரின் முகநூல் பதிவு வீடியோ வைரலாகி வருகிறது. என்ன பிழைப்பு இது எதாவது பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமோனி இதற்கு முன்னர் வேறொரு மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு காவலரை நேரில் சென்று கட்டி அணைத்து அவரை தேற்றி ஆறுதல் சொல்லி எதுவானாலும் இனி நீ […]
ரூ.390 கோடியில் 82 புதிய திட்டங்கள்; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அறிவிப்பு- 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் விருது சென்னை மாநகரட்சி ஆணையர் கார்த்திகேயன், சிறந்த காவல் ஆணையரகத்துக்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருக்கு கேடயம் வழங்கி முதல்வர் பாராட்டினார்.
தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ரூ.390 கோடி மதிப்பிலான புதிய பாலங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 82 திட்டங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 3 நாள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: அரியலூரில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படும். பெரம்பலூர், சின்ன முட்லூ பகுதியில் […]
பெரியார் சிலை தொடர்பான சர்ச்சை கருத்து: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு- தபெதிகவை சேர்ந்த 3 பேர் கைது
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து கோவை மாநகர போலீஸார் விசாரிக்கின்றனர். திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது. இதையடுத்து கோவையில் 6 இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகாலையில் தாக்குதல் இந்நிலையில், நேற்று அதிகாலை 3.50 மணியளவில் […]










