திருநெல்வேலி மாநகரத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக டீ மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறுது நேரம் ஓய்வு எடுக்கச்செய்து பின்னர் சாலையில் கவனமாக செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இப்பணியினை வாகன ஓட்டிகள் பாராட்டி மனதார நன்றியினை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ்
தேனி மாவட்டம் 01.11.2019 கம்பம் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்கள் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைத்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உத்தமபாளையம் முதல் குமுளி வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் இரவுநேர வாகன ஓட்டிகளுக்கும் தெளிவாக தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட […]
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள சுந்தரேஷ்வரர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசார், பள்ளி நிர்வாகிகள் இணைந்து போதை தடுப்பு பற்றி நேற்று (8/10/24) மதியம் 2 மணி முதல் 3.30 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் உதவி ஆய்வாளர் திரு. ராஜ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு. வெங்கடேஷ்பாபு ஆகியோர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமை […]
மதுரை மாவட்டம் மதுரை ஐ.ஜி. அதிரடி மாற்றம் மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அதிரடி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தென்மண்டல காவல்துறை தலைவராக தற்போது சென்னையில் கூடுதலாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காவல் ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது மதுரை புதிய தென் மண்டல காவல் துறை தலைவராக பிரேம் ஆனந்த் சின்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.