மதுரை, அருள்தாஸ்புரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை மாநகர் செல்லூர் , D2 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அருள்தாஸ்புரத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன் மகன் அழகர்சாமி வயது 26/21, இவர் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார் இவர் தனது சொந்த உபயோகத்திற்காக ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனம் வைத்திருந்தார் சம்பவ நாளான 21/05/21 அன்று இரவு தன் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த தனது இரு சக்கர வாகனத்தை காலையில் பார்த்த போது காணவில்லை. பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்காததால் செல்லூர் D2, குற்ற பிரிவு காவல் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் திருமதி. ராதா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழக்கு பதிவு செய்து தொலைந்து போன இரு சக்கர வாகனத்தே தேடி வருகின்றனர்.