Police Recruitment

குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார் சிவகங்கை நகர் காவல்துறை ஆய்வாளர் திரு மோகன் அவர்கள்.

சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் 26/19, அருண் நாதன் 24/19, பரமசிவம் 27/19, அருள் 30/19, அருண்பாண்டியன்20/19, பிரவீன் 20/19, அரவிந்த் 26/19, ஆனந்த் பாபு 32/19, வசந்த் 24/19 ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் ராஜகோபால் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி சிவகங்கை காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் 31.10.2019-ம் தேதி மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.