Police Department News

பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்….

பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்....

பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்….

குண்டர் சட்டத்தின் கீழ் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை சிறையில் அடைக்க காவல்துறையினர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் முருகனை சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று பேட்டை பகுதியில் வெள்ளப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அய்யப்பன் மீது கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகள் உள்ளதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாநகர காவல்துறையினர் அய்யப்பனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் அய்யப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அய்யப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.