கிருஷ்ணகிரி மாவட்டம், சமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறி கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்லப்பட்டி கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் நானா ரஞ்சன் பிரதான் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சாய் சரண் தேஜஸ்வி அவர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கடந்த 26ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜன ரஞ்சன் பிரதான் என்பவர் தொழில் நிமித்தமாக வாடிக்கையாளர் ஒருவரை பார்க்க வேலூர் சென்று வருவதாக மனைவி பூர்ணிமா என்பவரிடம் கூறிச் சென்றுள்ளார் அன்று இரவு அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தான் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரில் இன்ஸ்பெக்சன் செய்ய வந்து உள்ளதாகவும் தன்னுடன் தனது நண்பர் கிருஷ்ணகுமார் மற்றும் நண்பர் சபரீசன் மற்றும் சிலருடன் உள்ளதாக கூறியுள்ளார்
மீண்டும் இருபத்தி ஏழாம் தேதி காலை 10 மணி அளவில் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், தனது கணவரின் நண்பரான அட்வகேட் பாலாஜி என்பவரிடமிருந்து ஷிப்ட் கார் இரவல் பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில் காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி கொண்டு அமைவிடத்தை பார்த்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் மற்றும் ஆர் கே புரம் பாரதி நகரில் கடைசியாக கார் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாக இரண்டு நாட்கள் தேடிப் பார்த்ததில் எங்கும் கணவர் கிடைக்கவில்லை எனக் கூறி ஆடிட்டர் ஜன ரஞ்சன் பிரதான் மனைவி பூர்ணிமா கிருஷ்ணகுமார் மற்றும் சபரிஷ் ஆகிய இருவர் மீதும் சந்தேகம் உள்ளது எனவும் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கூறியும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலைய எல்லை பகுதியான கோல்லபட்டி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாய் சரண் தேஜஸ்வி அவர்கள் நேரில் வந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திருமால் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் மேலும் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
