
சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வில் நீதிபதிகள் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் த.செந்தில்குமாா் அவா்கள் தலைமையில் காவல்துறையின் சாா்பாக இன்று (04.09.2021) சிவகங்கை வியானி அருட்பணி மையம் கூட்ட அரங்கில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு ஆ.சுமதிசாய்பிரியா, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அவா்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினாா்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு.ஏ.கே.பாபுலால், அமர்வு நீதிபதி சிறப்பு நீதிமன்றம், மாண்புமிகு.பு.சுதாகர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், மாண்புமிகு.இனியா கருணாகரன், இளைஞர் நீதி குழுமம், திருமதி.பி.சரளா கணேஷ், தலைவர் குழந்தைகள் நலக்குழு, ஆகியோா்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்கள்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலுள்ள குழந்தைகள் நல காவலர்களும் கலந்து கொண்டனா்.
இதில் காவல் நிலையங்களிலுள்ள குழந்தைகள் நல காவலா்கள் சட்டத்திற்கு முரண்பாடான குழந்தைகள் நிலையம் வரும்போது, அவா்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும், அவா்களுக்கு தேவையான சட்ட உதவியும் கூடிய ஆலோசனையானது வழங்கப்பட்டது.
