Police Department News

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.

கோவில்பட்டி தாமஸ் நகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் கணியப்பன் மகன் கிரகதுரை வயது 62. இவர் 06.09.2021 அன்று தனது இரு சக்கர வாகனத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

இதுகுறித்து கிரகதுரை நேற்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு. காந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகலாபுரம் அய்யம்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் முனியசாமி வயது 24 என்பவர் கிரகதுரையின் இரு சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் முனியசாமியை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.