
மதுரையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது லஞ்சஒழிப்பு! போலிசார் நடவடிக்கை
மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே நம்பரை மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த நில அளவையர் முத்துப்பாண்டி தனக்கு ரூ 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக ரமேஷ் இடம் கேட்டுள்ளார்.
இதுசம்பந்தமாக ரமேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி ரசாயம் தடவிய ரூபாய் நோட்டை ,மதுரை தெற்கு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் முத்துப்பாண்டி இடம் கொடுத்துள்ளார். அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயர் முத்துப்பாண்டியை கையும், களவுமாக பிடித்தனர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
