மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
கண் இமைக்காமல் முழு ஊரடங்கை கண்காணிக்கும் J9 துரைப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள். 21.05.2021 J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு. வெங்கடேஷன் காவலர்கள் குழுவினருடன் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்றும் பரிசோதனை செய்கின்றனர்.பின்னர் ஒரு […]
400 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மதுரை மாநகரில் ரவுடிகள் மீண்டும் தலை தூக்குவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் ரவுடிகள் தொடர்பாக பட்டியல் தயார் செய்தனர். மதுரை மாநகரில் மட்டும் 400 ரவுடிகள் வசிப்பது தெரிய வந்தது. ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சோதனை நடந்தது. 400 ரவுடிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. […]
மதுரை மாவட்டம்:-சோழவந்தானில் பெட்ரோல் குண்டு வீசியதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்கல்லூரி மாணவர் கைது மதுரை மாவட்டம்சோழவந்தான் சங்கங் கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகையன் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிராமத்தின் முக்கியஸ்தர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்பின்னர்மாதவனுக்கு ஆதரவாக சித்தடி தெருவை சேர்ந்த மதன்குமார் வயது 25 என்பவர் ஆதரவாக செயல்பட்டதால் முத்தையாவிற்கும் மதன்குமாருக்கும் அடிக்கடி […]