மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது!’ – முன்னாள் இன்ஸ்பெக்டரின் பாசிடிவ் முயற்சி குழந்தைகளுக்கு சிறுவயது முதலே, ஆழ்துளைக் கிணறுகளின் ஆபத்துகள் குறித்து அவரவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வழங்க உள்ளேன். சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் கோர மரணம் ஏற்படுத்திச் சென்ற சோக வடு இன்னும் நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட […]
பெரிய கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து கோயிலின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்த தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள் குறித்த வரைபடத்தைப் பார்த்து விளக்கம் கேட்டறிகிறார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர். (அடுத்த படம்) தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சுற்று மாளிகையில் உள்ள சப்தகன்னியருக்கு நேற்று ‘மா காப்பு’ […]
பாலக்கோடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தினவிழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தினவிழா சங்கதலைவரும்,மாநில துணை பொது செயலாளருமான வடிவேல் தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி கலந்து கொண்டார். மேலும் எம்.ஜி.ரோடு, பேருந்து நிலையம், தருமபுரி சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக […]