மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து போட்டி 17.05.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் ராஜ் (DCB), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர் திரு.பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்ட காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.
தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி: மனைவி தீ வைத்து எரித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர்- போலஸ் விசாரணை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 31). இவரது மனைவி சங்கர ஆவுடையம்மாள். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கர ஆவுடையம்மாள் தனது பெற்றோர் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அருணாச்சலம் […]
மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுகள். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் சென்ற மாதம் (மே) திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது, போதைப் பொருள்களின் புழக்கம் மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் நீதிமன்ற அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 9 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை […]