



தமிழகத்தில் போலீஸார் வாகன சோதனையின்போது வெளிப்படையாக இருக்கும் வகையில் சாலை வீதி மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க இ-சலான் இயந்திரம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட் அல்லது ஏடிஎம் கார்டுகளை ‘ஸ்வைப்’ செய்து அபராதத் தொகையை போலீஸார் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் வாகன உரிமையாளர் யார்?, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா?, திருட்டு வாகனமா? என்பன உட்பட பல் வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. கார்டு மூலம் பணம் செலுத்த இயலாதவர்களுக்கு இ-சலான் ரசீது வழங்கப்படும். […]
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார் பொதுமக்கள் அனைவரும் இவ் விழிப்புணர்வில் கலந்துகொண்டு விழிப்புணர்வை சிறப்பான முறையில் நடத்தப்பட்டது இடம் MMC. Point,(G.H. எதிரில்) C.1 பூக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் R. பழனி SSI ஆகிய நான் இன்று 19.6.2021 காலை 11.45 மணிக்கு பொது மக்களுக்காக பொதுமக்களின் நலனுக்காக மூக கவசம் தலைக்கவசம் கொரோனா விழிப்புணர்வு நடந்ததுு 2 மீட்டர் இடைவெளியுடன் சிறந்த முறையில் இம்முகாம் நடத்தப்பட்டது
மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும். மதுரை, தெற்குவாசல் பகுதியில் தெவையின்றி வெளியே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், மற்றும் முக கவசம் அணியாமல் நடமாடும் நபர்களை போக்குவரத்து காவல்துறையினர் தெற்குவாசல் சந்திப்பு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி வரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் அனுப்பி கொரோனா பரிசோதனை செய்து விட்டு செல்ல வைத்தனர். இதனால் வாகன சோதனை ஒரு புறமும், கொரோனா பரிசோதனை ஒரு புறமும் நடந்தது.
