
சிவகிரி அருகே சாலைப்பணியாளர் தற்கொலை
சிவகிரி அருகே வடுகப்பட்டி மடத்துத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவர் சாலைப்பணியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனது மனைவி யுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மது அருந்தி விட்டு நேற்று காலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பழனியம்மாள் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் சஜிவ் விசாரணை நடத்தி வருகிறார்.
