
போதைப்பொருள் விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் சன்மானம்- துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் அறை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் வரவேற்பாளர் அறை புதிதாக கட்டப்பட்டது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
போலீசார் பொது மக்களிடம் நண்பர்களாக பழக வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வழக்கு விசாரணையின் போதும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தங்களது பகுதிகளில் சந்தேகிக்கும் படியான நபர்கள் யாராவது திரிந்தால் உடனே அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் பேசினார். நிகழ்ச்சி யில் இன்ஸ் பெக்டர் சத்ய பாமா, சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
