
ரியல் எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து 20 பவுன்-ரூ 23 லட்சம் கொள்ளை
மதுரை உத்தங்குடி டி.எம்.நகர் கிழக்கு மெயின் ரோட்டில் வசிப்பவர் சையத்கான் (வயது56), ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் எதிரே இவரது அலுவலகம் உள்ளது.
வழக்கம்போல் இரவு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதி காலையில் பார்த்த போது அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்தி ருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் 25 பிளாட் பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கே.புதூர் போலீசில் சையத்கான் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் பணம், நகைகள், பத்திரங்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
