Police Department News

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்-வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்-வாலிபர் பலி

மேலூர் அருகே கீழவளவை அடுத்துள்ள உடன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா என்ற சோனை காளை(வயது23). நேற்று இரவு தனது நண்பர்கள் நாகராஜ், முத்துக்குமார் ஆகியோருடன் கீழவளவில் இருந்து உடன்பட்டிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரைக்குடியில் இருந்து முத்துக்குமார் என்பவர் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீழவளவு போலீஸ் நிலையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.