Police Department News

மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாநகராட்சி குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்திற்கு தேவையான 3.30 கோடி லிட்டர் அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாநகராட்சி மூலம் அபராத தொகை வசூலிக்கப்படும். மேற்கண்ட தகவலை கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.