

சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
நேற்று (18.11.2023) மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூர்சம்ஹார விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தெற்குவாசல் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் அவர் காலமானார்.மதுரை மாவட்டம் மேலூரில் நடத்த அவரின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.குமார்., அவர்களும், காவல் கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து திட்டமிடல்) திரு. திருமலைகுமார், காவல் உதவி ஆணையர்கள் போக்குவரத்து மற்றும் மேலூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களும் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
