
மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது
மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து அவர்களின் தலைமையில்
தலைமை காவலர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர் அப்பொழுது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்றிருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட எத்தனித்தார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர் அப்பொழுது அவர் ஒரு அருவாளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து கேட்ட போது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக்காக அருவாளை வைத்திருந்ததாக கூறினார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்தனர்.
