Police Department News

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம்

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம்

மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கருப்பசாமி வயது 35 என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது

இந்த வழக்கின் சாட்சிகளின் விசாரணை மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 20 ஆம் தேதி சாட்சிகளின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம், குற்றவாளி கருப்பசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபனமானதால் குற்றவாளிக்கு ஐந்து வருட சிறை தண்டனையும் ரூபாய் 7000 அபராதமும் விதித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் ( தெற்கு ) காவலர்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.