Police Department News

காவலர் வீர வணக்க நாள் நெகிழ வைத்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன் I.P.S அவர்கள்

காவலர் வீர வணக்க நாள் நெகிழ வைத்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன் I.P.S அவர்கள்.

1959-ம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 21.10.2020ம் தேதியன்று காவலர் வீரவணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன் I.P.S அவர்கள்,
மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சு. ராஜேந்திரன் I.P.S அவர்கள்,
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S அவர்கள்
மலர் வளையம் வைத்து இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.