சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை ஊன்றி பராமரித்து வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.
01.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நகர் மேற்கு காவல் நிலையம், கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையம், சத்திரப்பட்டி காவல் நிலையம், வடமதுரை காவல் நிலையம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறுவிதமான மரக்கன்றுகளை ஊன்றி அதை காவலர்கள் பராமரித்து வருகின்றனர்.
இதனால் வருங்காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும், மலைப்பொழிவு அதிகரித்தும், காவல்நிலையம் அழகுறவும் இருக்கும்.
