ஆதரவற்றோருக்கு அசைவ உணவு வழங்கி அவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்
15.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.14.11.2020 ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் நகர்ப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் வசித்து வரும் முதியோர், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள், அசைவ உணவு வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.
