Police Department News

மதுரை, கீழ மாரட் வீதியில் மூதாட்டியை அவதூராக பேசிய தந்தை மகன் மீது, விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு

மதுரை, கீழ மாரட் வீதியில் மூதாட்டியை அவதூராக பேசிய தந்தை மகன் மீது, விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு

மதுரை மாநகர்,விளக்குத்தூண் B1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான கீழ மாரட் வீதியில் வசித்து வரும் முருகேசன் மனைவி சுந்தராம்பாள் வயது 59/21, இவர் கீழ மாரட் வீதியில் தயிர் மார்கெட் அருகில் தேங்காய் கடை நடத்தி வருகிறார், இவர் குடியிருக்கும் வீட்டருகே குடியிருந்து வரும் ரகுபாண்டி என்பவர் சம்பவ இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார், அந்த இடத்தில் எந்த வாகனத்தையும் நிறுத்த வேண்டாம் என்று அந்த இடத்திலுள்ள கடைகாரர் கூறியிருந்ததால், சுந்தராம்பாள் வாகனத்தை அந்த இடத்தில் நிறுத்த வேண்டாம் என கூறியுள்ளார், அதற்து ரகுபாண்டியும் அவரது மகனும் சுந்தராம்பாள் அவர்களை வயதில் மூத்தவர் என்று கூட பாராமல் மரியாதை குறைவாகவும் மிகவும் தரகுறைவாகவும் திட்டியுள்ளார்கள் இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சுந்தராம்பாள் அவர்கள் விளக்குத்தூண் B1, காவல்நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.