மதுரை மாவட்டம் அட்டப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, கீழவளவு போலீசார் அதிரடி
சட்டமன்ற பொது தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனையடுத்து கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கீழவளவு காவல் உதவி ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் அட்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவரை கைது செய்து விசாரித்த போது அவர் பொட்டபட்டியை சேர்ந்த அழகு மகன் பிரபு வயது 35 என தெரிய வந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்து ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தவின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர் .