Police Department News

சிவகங்கை மாவட்டம், உசிலம்பட்டியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் மரணம்

சிவகங்கை மாவட்டம், உசிலம்பட்டியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் மரணம்

சிவகங்கை மாவட்டம்,கண்டாங்கிபட்டி, அருகே உசிலம்பட்டியில் வசித்து வருபவர் போஸ் மகன் பாஸ்கரன் வயது 46, இவரது தந்தை போஸ் வயது 70, இவர் கடந்த 17 ம் தேதி காலை 9 மணியளவில் அவரது இரு சக்கரம் ஸ்கூட்டி வாகனத்தில் மேலூர் மார்க்கெட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் அவரது ஊரான உசிலம்பட்டிக்கு மேலூர் to சிவகங்கை ரோடு வண்ணாம்பாறைபட்டி அருகே சென்றுகொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது இதில் தலை மற்றும் உடலில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்து கீழே கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் 108 வாகனத்தில் ஏற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார் இது தொடர்பாக கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா அவர்கள் வழக்குப்பதிவு செய்து மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் வாகன விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.