Police Department News

கீழே கிடந்த 58,000 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி கெளரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கீழே கிடந்த 58,000 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி கெளரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

23.04.2021

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகள் மாரியம்மாள் (19) அவர்கள் கடந்த 21.04.2021 அன்று கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை முக்கூடல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின் காவல்துறையினர் விசாரணை செய்து பணம் மற்றும் செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

பெண்ணின் இச்செயலை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் அப்பெண்ணை கௌரவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து அவரின் நேர்மை குணத்தைப் பாராட்டி அப்பெண்ணிற்கு பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் IPS., அவர்கள் கூறுகையில் வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் காவல்துறையிடம் ஒப்படைத்த மாரியம்மாளின் நேர்மையை பாராட்டி மாவட்ட காவல் துறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.