Police Department News

சென்னை பெருநகர காவல் கொரோனாவால் உயிர்நீத்த தலைமை காவலரின் திருவுருவப்படத்திற்கு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி. செலுத்தினர்

சென்னை பெருநகர காவல்
கொரோனாவால் உயிர்நீத்த தலைமை காவலரின் திருவுருவப்படத்திற்கு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி. செலுத்தினர்

E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் (த.கா.17990) டி.கருணாநிதி,வ/48, த/பெ.துரைசாமி என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன், ராஜாஅண்ணா மலைபுரத்தில் உள்ள PRO காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் காவலர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல், 13.4.2021 அன்று அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்ததின் பேரில், பின்னர் மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி தலைமைக் காவலர் கருணாநிதி இன்று (23.4.2021) அதிகாலை சுமார் 05.00 மணியளவில் இறந்தார். இவருக்கு சுந்தரவள்ளி, பெ/வ.42 என்ற மனைவியும், சாய்கிஷோர், வ/15 என்ற மகனும் உள்ளனர்.
இன்று (23.4.2021) மாலை, J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இறந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ,இ.கா.ப., அவர்கள் மறைந்த தலைமைக் காவலர் திரு.கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை பெருநகர கூடுதல் காவலர்கள் இணை ஆணையர்கள் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள், தலைமைக் காவலரின் குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.