Police Department News

அருப்புக்கோட்டை அருகே எட்டு மாதங்களுக்கு முன் காணமல் போன பெண் எலும்புக்கூடாக மீட்பு பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

விருதுநகர் மாவட்டம்:-

அருப்புக்கோட்டை அருகே எட்டு மாதங்களுக்கு முன் காணமல் போன பெண் எலும்புக்கூடாக மீட்பு பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எட்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன சாத்தூர் ஓடையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.

பெண்ணை கொலை செய்ததாக பெண்ணின் கள்ளக்காதலன் ஞானகுருசாமி என்பவர் தாலுகா போலீசாரால் கைது
செய்யப்பட்டான்.

அருப்புக்கோட்டை அருகே கூர்த்திப்பாறை கிராமத்தை சேர்ந்த லிங்கம் என்பவர் மகள் சத்தியப்ரியா இவருக்கும் மதுரை மாவட்டம் தும்மகுண்டை சேர்ந்த வசந்த பாண்டியன் என்பவருக்கும் திருமணம் முடிந்து சத்தியப்ரியா மதுரையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு முன் கூர்த்திப்பாறையில் தனது தந்தையின் ஊரான கூர்த்திப்பாறைக்கு வந்த சத்தியப்ரியா திடீரென மாயமானர்.

தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்காததால் லிங்கம் மகளை காணவில்லை என்று கடந்த 25.8.2020 அன்று அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பல கட்ட விசாரணை மேற்கொண்ட தாலுகா போலீசார் இறுதியாக சத்தியப்ரியாவின் தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சத்தியப்ரியா சாத்தூர் கம்மாசூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருடன் அடிக்கடி தொலைப்பேசியில் பேசியது தெரியவந்ததை அடுத்து ஞானகுருசாமியை கைது செய்த தாலூகா போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் ஞானகுருசாமிக்கும் சத்தியப்ரியாவிற்கும் தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஞானகுருசாமியை சத்தியப்ரியா வற்புறுத்தியதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஞானகுருசாமி சாத்தூர் காட்டுப்பகுதிக்கு சத்தியப்ரியாவை அழைத்து சென்று அவருடன் உல்லாசமாய் இருந்துவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த ஓடையில் சத்தியப்ரியாவின் சடலத்தை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதை ஞானகுருசாமி போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து ஞானகுருசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் வேறுயாரையும் இதே போல் கொலை செய்துள்ளாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.