விருதுநகர் மாவட்டம்:-
முழு ஊரடங்கு உத்தரவான முதல் ஞாயிறான இன்று திருட்டுதனமாக விற்ற இறைச்சிகள் பறிமுதல்.
தமிழகம் முழுமையும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதிகாலை முதல் இறைச்சி கடைகள் இரகசியமாக நடைபெற்ற நிலையில் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது திருட்டுதனமாக இறைச்சிக்காக விற்பனைக்காக உயிருடன் கொண்டு செல்லப்பட்ட கோழிகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நபர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.
இவை மட்டுமல்லாமல் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பகுதியில் வீட்டில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுவதாக தகவலின் அடிப்படையில் சென்று பார்த்தபோது ஆட்டுக்கறிகள் விற்றதும் எஞ்சிய கறிகள் மட்டுமே இருந்தது பின்னர் அவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை செய்தனர்.