மதுரையில் நகை பட்டறையில் 38 பவுன் நகையை திருடிய ஊழியர், தெற்கு வாசல் போலீசார் விசாரணை
மதுரையில் நகைப் பட்டரையில் 38 பவுன் நகையை திருடிய ஊழியரை தெற்கு வாசல் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை தெற்குமாசி வீதி பச்சரிசிக்கார தெரு சொக்க கொத்தனார் தெருவை சேர்ந்தவர் உத்தம் பக்ரியா வயது 34/21, இவர் கான்ஸாமேட்டுத்தெரு மேட்டுக்கம்மாளத் தெருவில் நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு நகை செய்வதற்காக கொடுக்கப்பட்ட 38 பவுன் நகையை இங்கு வேலை செய்த ஊழியர் திருடிச் சென்று விட்டார் இந்த திருட்டு தொடர்பாக உத்தம்பக்ரியா தெற்கு வாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட தெற்குவாசல் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.ராதிகா அவர்கள் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற பட்டறை ஊழியர் மேற்குவங்கத்தை சேர்ந்த அமித்ஷாவை தேடி வருகின்றனர்.